Saturday, 30 April 2011

அழகிரி விவகாரம் மேலூர் தாசில்தார் சஸ்பெண்ட்

சர்ச்சையில் சிக்கிய மேலூர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்




  மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராகப் புகார் செய்து பின்னர் அதை மாற்றிக்கூறிய மேலூர் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன் பட்டிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பிஎம்.மன்னன் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தேர்தல் விடியோகிராபர் கண்ணன் பதிவு செய்ய முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. அப்போது மேலூர் தொகுதி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான காளிமுத்துவும் அங்கு இருந்தார்.
விடியோவில் பதிவு செய்ததைக் கண்டித்த திமுகவினர் வட்டாட்சியரைத் தாக்கியதாக கூறப்பட்டது. இதன் பிறகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னைத் திட்டியதாகவும் அவருடன் வந்த பி.எம்.மன்னன், ரகுபதி, திருஞானம் ஆகியோர் தன்னைத் தாக்கியதாகவும் கீழவளவு காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார்.
ஆனால் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டார். போலீஸார் வலியுறுத்தியதால் மு.க.அழகிரி மீது புகார் செய்ததாக அவர் தெரிவித்தார். ஆனாலும் அவரது புகாரின் படி தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.
அதே சமயம் நில எடுப்பு தாசில்தாராக காளிமுத்து பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் காளிமுத்துவை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்



No comments:

Post a Comment

Popular Posts

ithanal

About Me

வணக்கம் வாசகர்களே ! நம்ம சாமக்கோடாங்கி அப்பப்ப நாட்டுல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் சொல்லுவாறு... அதுக்கு நீங்களும் ஒத்துழைக்கனும். உங்களுடைய கருத்துக்களயும் உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தையும் எழுதுங்க...
Powered by Blogger.. Powered by Blogger.