Friday, 29 April 2011

நீதியை மிரட்டும் ...

நீதியை மிரட்டும் ...

மேலூர் தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி மு.க.அழகிரி நடத்திய நாடகம் இதோ... 

2011 சட்டமன்ற பொது தேர்தலில் பனபலத்தையும் தமது அராக்கிரம... பராக்கிரம...பலசாலிகளையும் பயன்படுத்தி   திருமங்கலத்தைப் போலவே வெற்றி பெற்று விடலாம் என்று மிதப்பில் இருந்த மு.க.அழகிரி க்கு தேர்தல் ஆணையம்  நெருக்கடி கொடுக்கும் வகையில் நேர்மையான, கடுமையான   மூன்று அதிகாரிகளை நியமித்து சவுக்கை கையில் கொடுத்து சுழட்ட ஆரம்பித்தது, வெற்றிக்கனியை  எளிதாக   சுவைத்து விட நினைத்தவர்களின் முதுகில் சவுக்கின் தழும்புகள் தாராளமாய் பாய... துடித்துப்போன அழகிரி,   தனது அடிவருடிகளிடம்  சீறினார்... விளைவு... 

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சகாயத்தை மாற்றினால் தான் காரியம் கைகூடும் என்ற முடிவுக்கு வந்தார் அழகிரி   

மதுரை கிழக்குதொகுதி தேர்தல் அதிகாரியும் மதுரை கோட்டாட்சியருமான சுகுமார் மூலம் சூழ்ச்சியை ஆரம்பித்தார்.  

மதுரை கோட்டாட்சியர் சுகுமார்   மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தன்னை அழகிரிக்கு எதிராக செயல்படும் படி வற்புறுத்துவதாக சொன்ன பொய் குற்றச்சாட்டை கூறிய சுகுமார் ஆளும் கட்சி டி வி களுக்கு மட்டும் பேட்டியை கொடுத்துவிட்டு மருத்துவமனையில் படுத்துக்கொண்டார். தேர்தல் ஆணையத்திற்கு சுகுமார் எழுதியதாக கூறப்பட்ட கடிதம் ஆளும் கட்சி டி வி களில் உடனடியாக காட்டப்பட்டது.  
அதே  நேரம் சுகுமார் துறை ரீதியாக எழுதிய கடிதத்தின்  நகலை   அழகிரி  தேர்தல் ஆணையத்திற்க்கு  இனைத்து  அனுப்பியது எப்படி? என்ற கேள்வியும் எழுந்தது.


தேர்தல் ஆணையம்  மதுரை கோட்டாட்சியர் சுகுமார்   எழுதிய கடிதம் பொய்யானது என அதனை ஏற்க்காமால் அவரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான கடுமயான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தது.

அழகிரியின் முதல் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் வைத்த முதல்  ஆப்பு...

ஆட்ச்சி அதிகாரத்தால் நினைத்தை சாதித்து வந்த அழகிரி இதை சற்றும் எதிர் பார்க்காத நிலையில்
மேலூர் வல்லடிகாரர் கோவிலில் வைத்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்த்து தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம்  நடத்தியதை படம் பிடிப்பதற்காக வீடியோ கிராபருடன் அந்த இடத்திற்க்கு வந்த தாசில்தார் காளிமுத்துவை நோக்கி அழகிரி கோபத்தில் கத்த அருகே இருந்த திமுக வைச்சேர்ந்த துனைமேயர் மன்னன் மேலூரைச்சேர்ந்த ரெகுபதி திருஞானம் உள்ளிட்டவர்கள் பாய்ந்து வந்து சரமரியாக தாக்கியுள்ளனர். அங்கே இருந்த டி எஸ் பி மனிவன்னன் அவரை பாதுகாத்து மீட்டு வந்துள்ளார். தாக்குதலுக்குள்ளான தசில்தார் தன்னை மத்திய அமைச்சர் அழகிரி கோபமாக திட்டியதாகவும் அதனைத்தொடர்ந்து மற்றவர்கள் தக்கியதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்ச்சிக்கு பேட்டியளித்தார். அப்படியே போலீசில் புகாரும் செய்தார்.

சக தாசில்தார் தாக்கப்பட்டதை பொருத்துக்கொள்ள முடியாத வருவாய் அலுவலர்கள் தமிழ்  நாடு முழுவதும் போரட்டங்களை நடத்தினார்கள் .

இதை சற்றும் எதிர்பாராத அழகிரி அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சமடைந்தார். 

தாக்குதலுக்குள்ளான காளிமுத்துவை தனக்கு சாதகமாக்கினால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் என அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தார் அழகிரி...

விளைவு...

அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை மாவட்ட ஆட்சி தலைவர் சொன்னது போலவே போலீசில் புகார் செய்ததாக பல்டி அடித்தார் தாசில்தார் காளிமுத்து.அதே சூட்டோடு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பினார்.

இதுவும் ஆளுங்கட்சி டிவி களில் மட்டுமே ஒளிபரப்பபட்டது.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சிதலைவர் சகாயத்தை மாற்ற வேண்டும் என சென்னை உயர்  நீதிமன்றத்தில் அழகிரி தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சகாயம்  நேர்மையானவர் என்ற சான்றும் தேர்தல் ஆணையத்தால் வழ்ங்கப்பட்டது.

இது அழகிரி க்கு வைத்த 2 வது ஆப்பு....

இதற்கிடையில் அடுத்து எதுவும் நடக்கலாம் என்ற நிலையில்

மேலூர் தாசில்தர் தாக்கப்பட்ட மேட்டரில் அழகிரி உள்ளிட்டவர்கள் அவசர அவசரமாக உயர்  நீதிமன்றம் மதுரைகிளையில் முன் ஜாமீன் பெறப்பட்டது.

மீண்டும் சூடுபிடித்தது...  


 மேலூர் தாசில்தர் தாக்கப்பட்ட மேட்டரில் தன்னை விடுவிக்க வேண்டும் என அழகிரி சென்னை உயர்  நீதி மன்ற மதுரை கிளையில்
வழக்கு தொடுத்தார்.
 அவருக்கு ஆதரவாக தாக்குதலுக்குள்ளான மேலூர் தாசில்தார் காளிமுத்து மூலமே அப்படி ஒரு சம்பவம்  நடை பெறவில்லை என பிரமான வாக்கு மூலத்தையும் தாக்கல் செய்ய வைத்தனர்.

இந்த வழக்கு விசாரனை ஏப்ரல் 28 ம் தேதி சென்னை உயர்  நீதி மன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.எஸ்.இராமனாதன் முன்னிலையில்   நடைபெற்றது.  



இதர் எந்தவித  வேறு பல திட்டங்களை தீட்டிய

No comments:

Post a Comment

Popular Posts

ithanal

About Me

வணக்கம் வாசகர்களே ! நம்ம சாமக்கோடாங்கி அப்பப்ப நாட்டுல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் சொல்லுவாறு... அதுக்கு நீங்களும் ஒத்துழைக்கனும். உங்களுடைய கருத்துக்களயும் உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தையும் எழுதுங்க...
Powered by Blogger.. Powered by Blogger.